உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலக நன்மைக்காக காமாட்சி அம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

உலக நன்மைக்காக காமாட்சி அம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

கோவை: உலக நன்மைக்காகவும் ஆடி மாதம் நிறைவடைவதை முன்னிட்டும்  கோவை மாவட்ட தமிழ்நாடு பிராமணர் சங்கம் மற்றும் காமாட்சி ஸ்தோத்திர மண்டலி  சார்பில் 108 திருவிளக்கு பூஜை கோவை ஆர் எஸ் புரம் காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது.

இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கு பூஜை செய்தனர். நிறைவாக இதில் கலந்து கொண்டவர்களுக்கு வெற்றிலை பாக்கு பழம் மற்றும் மஞ்சள் கயிறு பிரசாதம் ஆகியன வழங்கப்பட்டது




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !