துர்க்கை காளியம்மன் கோவிலில் பால்கூட ஊர்வலம்
ADDED :1 days ago
திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள துர்க்கை காளியம்மன் கோவிலில் பால் கூட ஊர்வலம் நடந்தது.
திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பெரியசெவலை கிராமத்தில் உள்ள துர்க்கை காளியம்மன் கோவிலில் தர்மஜக்ரன் சார்பில் ஆடி மாத பால்கூட ஊர்வலம் நடந்தது. இதையொட்டி நேற்று மாலை 4:00 மணியளவில் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக தீபாரதனை நடந்தது.தொடர்ந்து 5:00 மணி அளவில் கோவிலிலிருந்து 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் சுமந்து முக்கிய வீதிகளின் வழியாக சென்று துர்க்கை காளியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. விழா ஏற்பாடுகளை தர்மஐக்ரன் மாவட்ட செயலாளர் சரவணன், ஒன்றிய செயலாளர் சுதாகரன், பழனி, அமரவேல் ஒருங்கிணைப்பாளர் பத்மா மற்றும் மாவட்ட பொறுப்பாளர் ஏழுமலை ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.