உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை கோயில்களில் சிறப்பு வழிபாடு

கோவை கோயில்களில் சிறப்பு வழிபாடு

கோவை : மாதம்தோறும் வரும் சிவராத்திரியை முன்னிட்டு நேற்று கோவை ராம்நகர் கோதண்டராமர் கோவிலில் உள்ள ஸ்ரீ ஆபத்சகாய வில்வேஸ்வரருக்கு புஷ்பம், மற்றும் வில்வம் இலையால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

*கார்த்திகை சோமவாரம் பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் கோவை ராம்நகரில் உள்ள விஎன்.தோட்டம் பகுதியில் உள்ளமங்களாம்பிகா சமேத ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !