இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் கார்த்திகை தீப விழா
ADDED :1031 days ago
மதுரை: சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மேதகு ராணி டி எஸ் கே மதுராந்தகி நாச்சியார் அவர்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் திருக் கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுவாமி நன்மை தருவார், மத்திய புரி அம்மன், சுப்ரமணியருக்கு தலைமை அர்ச்சகர் தர்மராஜ் சிவம் சிறப்பு பூஜை நடத்தினார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.