கார்த்திகை சோமவாரம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் பக்தர்கள் தரிசனம்
ADDED :1194 days ago
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் கார்த்திகை கடைசி சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். சிதம்பரம் நடராஜர் கோயிலில் கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு பக்தர்கள், குறிப்பாக பெண்கள் தங்கள் வேண்டுதல் நிறை வேற வேண்டி, கொடிமரத் துடன் சேர்ந்த சித்சபையை 108 முறை வலம் வந்தனர். ஒரு சில பக்தர்கள் 21முறை வலம் வந்தனர். நேற்று அதிகாலை முதலே சோமவாரத்தை முன்னிட்டு உள்ளூர் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஆண்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிதம்பரம் நடராஜர் கோவில் தரிசனத்திற்காக வந்திருந்தனர்.