அமணீஸ்வரர் கோவிலில் தேய்பிறை பஞ்சமி சிறப்பு வழிபாடு
ADDED :1190 days ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, தேவணாம்பாளையம் அகிலாண்டேஸ்வரி கோவிலில் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
பொள்ளாச்சி அடுத்துள்ள, நெகமம், தேவணாம்பாளையம் ஆற்றோரம் அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி சமேத அமணீஸ்வரர் கோவிலில், தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு, வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ேஹாமம், அபிேஷகம், அலங்கார பூஜைகள், தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகளை அமணீஸ்வரர் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.