காளஹஸ்தி சிவன் கோயிலில் உச்சநீதிமன்ற நீதிபதி தரிசனம்
ADDED :1026 days ago
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ராஸ்தோகி குடும்பத்தாரோடு சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்தவரை தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசன ஏற்பாடுகளையும் செய்தனர் .கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரையும் ஞானப் பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் வளாகத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும் நிர்வாக அதிகாரி சாகர் பாபு வழங்கினார்.