பரமக்குடி பெருமாள் கோயிலில் 4 ம் நாள் திருஅத்யயன உற்சவம்
ADDED :1089 days ago
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் இன்று 4 ம் நாள் திரு அத்யயன உற்சவம் எனப்படும் பகல் பத்து விழா நடந்தது.
இக்கோயிலில் தினமும் பெருமாள் தாயார் மண்டபத்தில் எழுந்தருளி பிரபந்தங்கள் வாசிக்கப்பட்டு வருகிறது. இதன்படி இன்று காலை 9:00 மணிக்கு பெருமாள், ஆண்டாள் கொண்டை சூடி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து ஆண்டாள் பிராட்டி சூடி கலைந்த மாலை, கிளி மற்றும் பட்டுப்புடவை உடுத்தி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து பாகவதர்கள் பஜனை பாடல்கள் பாடியதுடன், பிரபந்தங்கள் வாசிக்கப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் ஆழ்வார்கள் சன்னதியில் தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. ஜன., 2 ல் பெருமாள் பரமபத வாசல் வழியாக பக்தர்களுக்கு அருள் அளிக்க உள்ளார்.