உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் ராப்பத்து உற்ஸவம் நாளை நிறைவு

திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் ராப்பத்து உற்ஸவம் நாளை நிறைவு

திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை உற்ஸவத்தை முன்னிட்டு நடந்த ராப்பத்து உற்ஸவம் நாளை நிறைவடைகிறது.

சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் அத்யான உத்ஸவம் டிச. 23ல் பகல் பத்து உத்ஸவத்துடன் துவங்கியது. தினசரி  மாலையில் பெருமாள் ஆண்டாள் சன்னதி எழுந்தருளி பூஜைகள் நடந்தது. ஜன.2ல் வைகுண்ட ஏகாதசி உத்ஸவத்தன்று சொர்க்கவாசல்  இரவு 10:30 மணி அளவில்  திறக்கப்பட்டு  தீபாராதனை நடந்து பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பரமபதவாசல் கடந்தார். தொடர்ந்து ராப்பத்து உத்ஸவம் துவங்கியது. தினசரி மாலையில் பெருமாள் சொர்க்கவாசல் எழுந்தருளல் நடைபெற்றது. நாளையுடன் ராப்பத்து உற்ஸவம் நிறைவடைவதை முன்னிட்டு காலை 9:30 மணி அளவில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் புறப்பாடாகி தாயார் சன்னதி எழுந்து சொர்க்க வாசல் கடப்பார். தொடர்ந்து தாயார் சன்னதி எழுந்தருளி உபயநாச்சிமாருடன் திருமஞ்சனம் நடைபெறும். இரவு 7:00 மணிக்கு நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் வைபவம், திருவடி தொழுதல் நடந்து அரண்மனை மரியாதை நடைபெறும்.யாக சாலை சென்று பூஜைகள் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !