உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் கோயில்களில் கூடாரவல்லி உற்சவம்

திருப்பரங்குன்றம் கோயில்களில் கூடாரவல்லி உற்சவம்

திருநகர்: திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதேவி பூமாதேவி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு அபிஷேகங்கள், பூஜைகள் முடிந்து சிறப்பு அலங்காரமாகி மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. மகாலட்சுமி காலனி ஸ்ரீ பெருந்தேவி தாயார் பிரசன்ன வரதராஜ பெருமாள் கோயில், சீனிவாசா நகர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் மூலவர்கள், உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் முடிந்து அலங்காரமாகி மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. அய்யனார் அச்சமுத்தம்மன் கோயிலில் மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை முடிந்து மலர் அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !