கோவை கோவில்களில் ராப்பத்து உற்சவம் :அலங்காரத்தில் பெருமாள்
ADDED :1157 days ago
காரமடை ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி ராப்பத்து 9ம் நாளில் தவழும் கிருஷ்ண அவதாரத்தில் பக்தர்களுக்கு ரங்கநாதர் அருள்பாலித்தார். மார்கழி மாதத்தில் வரும் கூடாரவல்லி வைபவத்தில் சிறுமுகை அடுத்துள்ள சிட்டேபாளையம் ஸ்ரீதேவி பூதேவி சமேத திம்மராயப்பெருமாள் கோவிலில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.