ராவத்தூர் மாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை விழா
ADDED :1019 days ago
சூலூர்: ராவத்தூர் கண் தந்த மாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.
சூலூர் அடுத்த ராவத்தூரில் உள்ள ராஜ கணபதி கோவில், கண் தந்த மாரியம்மன் கோவில் பழமையானவை. இக்கோவில்களுக்கு கடந்த டிச., 4 ம்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. மண்டல பூஜையை ஒட்டி, அம்மனுக்கு தினமும் அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. மண்டல பூஜை நிறைவை ஒட்டி, இன்று ஹோமம், அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.