விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக பிரம்மோற்சவம் கொடியேற்றம்
விருத்தாசலம் : விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக திருவிழாவையொட்டி, ஆழத்து விநாயகர் கோவிலில் நேற்று கொடியேற்றம் நடந்தது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் மாசிமக பிரம்மோற்சவம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.அதன்படி, நடப்பாண்டு மாசிமக திருவிழா கடந்த மாதம் 31ம் தேதி செல்லியம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று (14ம் தேதி) ஆழத்து விநாயகர் கோவிலில் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி காலை 6:00 மணிக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட திரவிய பொருட்களால் ஆழத்து விநாயகர் சுவாமிக்கு சிறப்பு அபி ேஷகம் நடந்தது. காலை 11.50 மணிக்கு ஆழத்து விநாகயர் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்தின் முன் எழுந்தருளினார். அதன்பின், சிவாச்சாரியார்கள் கொடிமரத்திற்கு பூஜைகள் செய்து, கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது.