உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வலையபட்டியில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

வலையபட்டியில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே வலையபட்டி ஸ்ரீமகாலட்சுமி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் விழா நடந்தது.

இடையகோட்டை வலையபட்டியில், ராயர் குலவம்சம் குரும்பா கவுண்டர் இன மக்களின் குலதெய்வமான மகாலட்சுமி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரி விழா நான்கு நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். முதல் நாளில் குலவிளக்கு ஏற்றி விழா தொடங்கியது. இரண்டாம் நாளான நேற்று பரம்பரை யாளர்கள் தலையில் முதல் தேங்காய் உடைத்து, வேண்டி வரம் கேட்பவர்களுக்கு தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் விழா நடந்தது. பூசாரி பூச்சப்பன் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தார். நேற்று 52 க்கும் மேற்பட்டவர்களுக்கு தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றப்பட்டது. மூன்றாம் நாளான இன்று பரிவார தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து குல வழக்கப்படி சிறப்பு பூஜை அபிஷேக ஆராதனை நடைபெறும். தொடர்ந்து பரம்பரையாளர்கள், குலமக்கள் முக்கியஸ்தர்கள் மற்றும் அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !