உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

பாகூர், : குடியிருப்புபாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

பாகூர் அடுத்த குடியிருப்புபாளையம் கிராமத்தில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், மயானக்கொள்ளை விழா கடந்த 24ம் தேதி கொடியேற்றதுடன் துவங்கியது. நேற்று முன்தினம் மயானக்கொள்ளை உற்சவம், நேற்று காலை 9:00 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவத்தில் சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 9:00 மணிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !