பூமடந்தை மாரியம்மன் கோயிலில் விளக்கு பூஜை
ADDED :1066 days ago
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே இளமனூர் கிராமத்தில் உள்ள பூமடந்தை மாரியம்மன் கோயிலில் 26 ஆம் ஆண்டு பூக்குழி உற்ஸவ விழாவை முன்னிட்டு விளக்கு பூஜை நடந்தது.
மூலவர் பூமடந்தை மாரியம்மன், 18-ம் படி கருப்பணசாமி, நொண்டி சோனையா சாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. நேற்று மாலை 5:00 மணி அளவில் ஏராளமான பெண்கள் விளக்கு பூஜையில் பங்கேற்றனர். மாங்கல்ய பூஜை, அர்ச்சனை, நாமாவளி, பஜனை உள்ளிட்டவைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வருகிற மார்ச் 7 (செவ்வாய்க்கிழமை) மாலை 4:00 முதல் 5:30 மணிக்குள் கோயில் வளாகத்தில் நேர்த்திக்கடன் பக்தர்களால் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. ஏற்பாடுகளை கோயில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.