உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கச்சத்தீவு திருவிழா : ராமேஸ்வரத்தில் இருந்து 2193 பக்தர்கள் படகில் பயணம்

கச்சத்தீவு திருவிழா : ராமேஸ்வரத்தில் இருந்து 2193 பக்தர்கள் படகில் பயணம்

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழாவுக்கு ராமேஸ்வரத்தில் இருந்து 2193 பக்தர்கள் தீவிர பரிசோதனைக்கு பின் படகில் புறப்பட்டு சென்றனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து 25 கி.மீ., தூரத்தில் பாக்ஜலசந்தி கடலில் உள்ள கச்சத்தீவு புனித அந்தோணியார் சர்ச் திருவிழா யொட்டி நேற்று மதியம் 12:30 மணிக்கு நெடுந்தீவு பாதிரியார் கொடியை ஏற்றி வைத்து விழாவை துவக்கினார். விழாவில் பங்கேற்க நேற்று காலை 5:30 மணி முதல் மதியம் ஒரு மணி வரை ராமேஸ்வரம் கடற்கரையில் இருந்து 60 விசைப்படகு, 12 நாட்டுப்படகில் 2193 பக்தர்கள் புறப்பட்டு சென்றனர். பக்ர்களை ராமநாதபுரம் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், எஸ்.பி., தங்கதுரை வழியனுப்பி வைத்தனர். பக்தர்களுடன் சமூக விரோதிகள் ஊடுருவலை தடுக்க க்யூ பிரிவு போலீசார், வருவாய்த்துறை, சுங்கத்துறையினர் பக்தர்களிடம் விசாரணை செய்து, அடையாள அட்டையை ஆய்வு செய்த பின்பு கடல் பயணத்திற்கு அனுமதித்தனர். நடுக்கடலில் இந்திய கடற்படை, கடலோர காவல் படையினர் பக்தர்களை சோதனை செய்த பின் கச்சதீவுக்கு செல்ல அனுமதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !