வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் மண்டல பூஜை
ADDED :931 days ago
வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் மாலை துவங்கி 48ம் நாள் மண்டல பூஜை நடந்தது. 1008 கலசங்கள் வைத்து இரண்டு கால யாக பூஜைகள் நடந்தன. திருச்சி திருவெள்ளாரை பெருமாள் கோயில் அர்ச்சகர் ரமேஷ் பட்டர் தலைமையிலான குழுவினர் நடத்தி வைத்தனர். ஏற்பாட்டினை திருப்பணி பொறுப்பாளர்களான என்.பத்மநாபன், என்.ஆர்.ஏ., முரளிராஜன் செய்திருந்தனர்.