பழநி கோயிலில் கூட்டம்
ADDED :921 days ago
பழநி: பழநி மலைக்கோவிலுக்கு ஞாயிறு விடுமுறை நாளை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகரித்தது. பழநி கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை,விடுமுறை நாளை முன்னிட்டு வெளியூர், வெளி மாநில பக்தர்கள் காலை முதல் அதிகம் வருகை புரிந்தனர். பழநி மலை கிரிவீதி பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி இருந்தனர். இதனால் வாகன நெரிசல் ஏற்பட்டது. மலைக்கோயில் செல்ல, வின்ச், ரோப் கார், தரிசன வரிசையிலும் கூட்டம் அதிகம் இருந்தது. தரிசன வரிசையில் பக்தர்கள் மூன்று மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். சன்னதி வீதி அய்யம்புள்ளி ரோடு ஆகியவற்றில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆத்திரமிப்பு கடைகள் அதிகரித்திருந்தன.