உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தங்கல் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா துவக்கம்

திருத்தங்கல் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா துவக்கம்

சிவகாசி: சிவகாசி, திருத்தங்கல் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

சிவகாசியில் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில், ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் , சிம்மம், குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ரதவீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாவிப்பார். ஏப். 9 ல் பொங்கல் விழாவும், ஏப். 10 ல் கயர் குத்து விழாவும், ஏப்.12 ல் தேரோட்டமும் நடைபெறும். திருவிழாவை முன்னிட்டு தினமும் இரவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இதே போல் திருத்தங்கல் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவும் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. சுவாமி தினமும் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனத்தில் வீதி உலா வருவார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !