திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் கோவிலில் மூலம் நட்சத்திர திருமஞ்சனம்
ADDED :1 days ago
கடலுார், திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் பங்குனி மாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் கோவிலில் பங்குனி மாத மூலம் நட்சத்திரத்தையொட்டி சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. கடலுார், திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் கோவிலில் பங்குனி மாத மூலம் நட்சத்திரத்தையொட்டி நேற்று காலை திருப்பள்ளியெழுச்சி, திருமஞ்சனம், திருப்பாவை சாற்றுமறை நடந்தது. மாலை ஊஞ்சல் உற்சவம், வீதியுலா, இரவு சேவை சாற்றுமறை நடந்தது. உற்சவர் மணவாள மாமுனிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.