ராமகிருஷ்ணா மடத்தின் நிர்வாகி காலமானார்
ADDED :1116 days ago
கோல்கட்டா-ராமகிருஷ்ணா மடம் மற்றும் ராமகிருஷ்ணாமிஷன் துணைத் தலைவர் சுவாமி பிரபானந்தா, 91, ஆறு மாதங்களாக வயது மூப்பு தொடர்பான நோய்களால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கோல்கட்டாவில்உள்ள ராமகிருஷ்ணா மடத்தின் மருத்துவமனையில் அவர் காலமானார். நேற்று இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.