உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திட்டக்குடி வைத்தியநாதசுவாமி கோவில் பங்குனி உத்திர தேர் திருவிழா

திட்டக்குடி வைத்தியநாதசுவாமி கோவில் பங்குனி உத்திர தேர் திருவிழா

திட்டக்குடி: திட்டக்குடி வைத்தியநாதசுவாமி கோவில் பங்குனி உத்திரப் பெருவிழாவில், நேற்று நடந்த திருத்தேர் விழாவில் ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர்.

திட்டக்குடி அசனாம்பிகையம்மன் உடனுறை வைத்தியநாதசுவாமி கோவில் பங்குனி உத்திர பெருவிழா, மார்ச் 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, வீதியுலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏழாம் நாள் திருவிழாவான, 1ம் தேதி சுவாமி திருக்கல்யாண வைபவம் நடந்தது. நேற்று காலை திருத்தேர் விழாவையொட்டி விக்னேஸ்வரர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர் மற்றும் அசனாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் விக்னேஸ்வரர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர், அசனாம்பிகையம்மன் அலங்கரிக்கப்பட்டு மூன்று தனித்தனி தேர்களில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அமைச்சர் கணேசன், உபயதாரர்கள், பொதுமக்கள் வடம்பிடித்து தேர்இழுத்தனர். மூன்று தேர்களும், தேரோடும் வீதி வழியாக வலம் வந்து மதியம் 12.30மணிக்கு, நிலையை அடைந்தது. மாலை நாட்டிய நிகழ்ச்சியும், இரவு நடராஜசுவாமி திருவீதியுலாவும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !