உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 7 கிராமங்களில் ஒரே நாளில் முத்தாலம்மன் கோவில் திருவிழா

7 கிராமங்களில் ஒரே நாளில் முத்தாலம்மன் கோவில் திருவிழா

நத்தம், நத்தம் அருகே குட்டுப்பட்டி, நடுவனூர், பண்ணுவார்பட்டி, காசம்பட்டி, கல்வேலிபட்டி, சாத்தாம்பாடி, தேத்தாம்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள முத்தாலம்மன் கோவில் திருவிழாக்கள் இன்று நடந்தது. இதில் அந்தந்த கிராமங்களில் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் மாவிளக்கு, அக்னிசட்டி, பால்குடம், பொங்கல் வைத்தல் ,அலகு குத்துதல், கிடாய்கள் வெட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தினர். தொடர்ந்து அந்தந்த கிராமங்களில் மாலையில் மேளதாளம் முழங்க பக்தர்கள் புடைசூழ தீவட்டி பரிவாரங்களுடன் முத்தாலம்மன் பூஞ்சோலைக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !