உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் கோயிலில் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம்

திருப்பரங்குன்றம் கோயிலில் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடந்தது. நாளை (ஏப். 8) மதியம் 12:20முதல் மதியம் 12:40 மணிக்குள் சுப்பிரமணிய சுவாமி- தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.

பச்சை குதிரை ஓட்டம்: பங்குனி திருவிழாவில் இன்று மாலை 3:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை பச்சைக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கிரிவீதி, ரத வீதிகளில் பச்சை குதிரை ஓட்டம் நடந்தது. கோயில் காவல் மிராசு கள்ளத்தேவர் வகையறா பங்காளிகள் சார்பில் பச்சை குதிரைக்கு கவாட களி கொடுக்கும் நிகழ்ச்சி முடிந்து சுவாமிக்கு பரிவட்டம் கட்டப்பட்டது.

பட்டாபிஷேகம்: இரவு 7:45 மணிக்கு கோயில் ஆறுகால் பீடத்தில் தங்க குடத்தில் புனித நீர் நிரப்பி வைத்து பூஜை நடந்தது. பட்டாபிஷேக அலங்காரத்தில் சுப்ரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார். சுவாமியின் கிரீடத்திற்கு புனித நீர் அபிஷேகம், தீபாராதனை முடிந்து சுவாமியின் சிரசில் சாத்துப்படி செய்யப்பட்டது. சுவாமியின் கரத்தில் நவரத்தின செங்கோல், சேவல், மயில் கொடிகள் சாத்துப்படி செய்து சுவாமிக்கு பரிவட்டம் கட்டப்பட்டு தீபாராதனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !