திருவண்ணாமலையில் பங்குனி உத்திர திருக்கல்யாண ஊஞ்சல் உற்சவம்
ADDED :990 days ago
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண விழாவில், ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம், கடந்த, 4ல் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று இரவு, நலங்கு உற்சவம் நடந்தது. இன்று அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. பின் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து சிறப்பு ஹோமம், இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை தாமரை குளத்தில் பாலிகை விடும் நிகழ்வு நடக்கிறது.