உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயிலில் அலைமோதிய பக்தர்கள்: காத்திருந்து தரிசனம்

ராமேஸ்வரம் கோயிலில் அலைமோதிய பக்தர்கள்: காத்திருந்து தரிசனம்

ராமேஸ்வரம்: தொடர் விடுமுறையால் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.ஏப்., 7 புனித வெள்ளி, இதனைத்தொடர்ந்து சனி, ஞாயிறு என தொடர் விடுமுறை என்பதால் ராமேஸ்வரம் கோயிலுக்கு கடந்த 2 நாட்களாக பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கூட்டம் வருகை அதிகரித்தது. நேற்று தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். இதனால் கோயில் முதல் பிரகாரத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், அரை மணிநேரம் பக்தர்கள் காத்திருந்து சுவாமி, பர்வதவர்த்தினி அம்மனை சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் சுற்றுலா தலமான தனுஷ்கோடியில் அரிச்சல்முனைக்கு ஏராளமான ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இங்குள்ள அழகிய கடல் அலை, கடற்கரை மற்றும் 1964 புயலில் இடிந்த சர்ச், கோயில் ரயில்வே ஸ்டேஷன் கட்டிடங்களை கண்டு ரசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !