உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பங்குனி திருக்கல்யாண உற்சவம்

சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பங்குனி திருக்கல்யாண உற்சவம்

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் பங்குனி உத்திர விழாவையொட்டி, ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாள் பூப்பல்லக்கில் வீதிவலம் வந்தார். இக்கோயிலில் சுந்தரராஜ பெருமாள், கல்யாண சவுந்தரவல்லி தாயாருக்கு திருக்கல்யாண விழா ஏப்., 5 அன்று நடந்தது. தொடர்ந்து ஊஞ்சல் சேவை, மாற்று திருக்கோலம் நடந்தது. நேற்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இரவு 7:00 மணிக்கு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பூப்பல்லக்கில் எழுந்தருளினார். பின்னர் சிறப்பு மேள தாளங்கள் முழங்க, முக்கிய வீதிகளில் வலம் வந்து இரவு 10:00 மணிக்கு கோயிலை அடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !