புலியகுளம் மாரியம்மன் கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்
ADDED :996 days ago
கோவை: புலியகுளம் மாரியம்மன் கோவில் பங்குனி உற்சவம் சிறப்பாக நடந்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக அம்மன் திருக்கல்யாண வைபவம் நடந்தது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் திருவீதி உலா வந்தார். பெண்கள் தீர்த்த குடம் எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர்.