உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேசும் கன்னிமார் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு

பேசும் கன்னிமார் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு

அலங்காநல்லூர்: மதுரை காஞ்சரம்பேட்டை பாறைப்பட்டி பேசும் கன்னிமார் கோயிலில் சித்திரை மாத சர்வ அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி ஏழு கன்னிமார் அம்மனுக்கும் பல்வகை மலர்களால் அர்ச்சனை, தீபாராதனை செய்து வழிபட்டனர். முன்னதாக கிராம சித்தி விநாயகர், மந்தை கருப்புசாமி கோயிலில் உலக நன்மை வேண்டி பூஜைகள், கூட்டுப் பிரார்த்தனை நடந்தது. பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !