அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவ விழா பந்த கால் நடப்பட்டது
ADDED :1035 days ago
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவ விழாவிற்கு பந்த கால் நாடும் நிகழ்ச்சி நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சம்பந்த விநாயகர் சன்னதி முன், சித்திரை வசந்த உற்சவ விழா பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் பந்த கால் நடப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.