கோவை தண்டு மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED :946 days ago
கோவை : கோவையின் குலதெய்வம் என்று அழைக்கப்படும் தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 17ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் முதல் திருவிளக்கு பூஜை கடந்த 21ம் தேதி நடந்தது. இதன் தொடர்ச்சியாக இரண்டாவது திருவிளக்கு பூஜை இன்று நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். இதில் பெண்கள் திரளாக கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.