அருணாசலேஸ்வரர் கோவிலில் காத்திருந்த பக்தர்கள் தரிசனம்
ADDED :1005 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று விடுமுறை தினம் என்பதால் அதிகளவில் பக்தர்கள் குவிந்தனர்.
கோயிலுக்கு சனி, ஞாயிறு, தொழிலாளர் தினம் விடுமுறை நாளை முன்னிட்டு வெளியூர், வெளி மாநில பக்தர்கள் அதிகம் வருகை புரிந்தனர். சுவாமி தரிசனம் செய்ய இரண்டாம் பிரகாரத்தில், தரிசன வரிசையில் பக்தர்கள் மூன்று மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.