திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை பிரதோஷ வழிபாடு
ADDED :1207 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு பெரிய நந்தி பகவானுக்கு சிறப்புஅபிஷேகம் நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்தி பகவானுக்கு பால், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம், நந்தி பகவானுக்கு நடந்த சிறப்பு பூஜை நடைபெற்றது. பெரிய நந்தி பகவான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பூஜையில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.