மாகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு வழிபாடு
ADDED :890 days ago
பல்லடம்: பல்லடம் அருகே, மாகாளியம்மன் கோவிலில், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு வழிபாடு நடந்தது.
பல்லடம் அடுத்த, சின்ன வடுகபாளையம் கிராமத்தில் உள்ள செல்வ விநாயகர், மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, ஆண்டு விழா மற்றும் சித்ரா பௌர்ணமி விழா என, முப்பெரும் விழா நடந்தது. சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நடந்த திருவிளக்கு வழிபாட்டில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், தாய்மார்கள் பங்கேற்று வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் மாகாளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாலை 7.30க்கும் கும்பாபிஷேக இரண்டாம் நாள் மண்டல பூஜை நடந்தது. விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும், விழா குழுவின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.