சேவூர் ஆதிநாதபகவான் ஜெயினர் கோவில் விழாவில் சிறப்பு அபிஷேகம்
ADDED :1040 days ago
திருவண்ணாமலை ; திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தில் ஆதிநாதபகவான் ஜெயினர் கோவில் விழாவில், புனித நீரை யானை மீதும் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்றனர். பின் 1008 கும்ப கலச புனித நீர் ஊற்றி ஜெயினருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.