காரமடை அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி வைபவம்
ADDED :912 days ago
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் வைகாசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் நடந்தது.
கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில். இக்கோவிலில் வைகாசி மாத, கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் நடந்தது. அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், கால சந்தி பூஜை, விஷ்வக் சேனர், கலச ஆவாகனம் ஆகிய பூஜைகள் நடந்தன. ஸ்ரீதேவி பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாளுக்கு ஸ்தபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. மேளதாளம் முழங்க, கோவில் வளாகத்தில் வெள்ளி சிம்மாசனத்தில் அரங்கநாதர் புறப்பாடு நடைபெற்றது. பின்பு ஆஸ்தானம் அடைந்ததும், சற்று முறை சேவித்து மகா தீபாராதனை செய்து, பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. இந்த வைபவ நிகழ்ச்சியில் கோவில் சலத்தார்கள் அர்ச்சகர்கள் மிராஸ்தர்கள் கோவில் பணியாளர்கள் பக்தர்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.