காஞ்சி வைகுண்ட பெருமாள் கோவிலில் கருடசேவை
ADDED :898 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், 108 திவ்ய தேச கோவில்களில் ஒன்றான வைகுண்ட பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல் நாள் பெருமாள் சப்பர வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது. இதையடுத்து இரவு சிம்ம வாகனத்திலும், மறுநாள் காலை ஹம்ச வாகனத்திலும் சுவாமி வீதியுலா நடந்தது. மூன்றாம் நாள் கருடசேவை உற்சவத்தை முன்னிட்டு, நேற்று காலை 7:00 மணிக்கு பெருமாள் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலில் இருந்து புறப்பட்டார். நான்கு ராஜவீதிகளில் வீதியுலா நடந்தது. காலை, 10:00 மணிக்கு பெருமாள் கோவிலை சென்றடைந்தார். இரவு ஹனுமந்த வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது.