உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னூர் அம்மன் கோவில்களில் அமாவாசை வழிபாடு

அன்னூர் அம்மன் கோவில்களில் அமாவாசை வழிபாடு

அன்னூர்: அன்னூர் வட்டாரத்தில், அம்மன் கோவில்களில், அமாவாசை வழிபாடு நேற்று நடந்தது. அன்னூர் பெரிய அம்மன் கோவிலில், அம்மனுக்கு நேற்று மதியம் பால், தயிர், நெய், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேக பூஜை நடந்தது. இதையடுத்து அலங்கார பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நாரணாபுரம் ஊராட்சி, வடுக பாளையத்தில் உள்ள பேச்சியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.  அன்னூர் சின்னம்மன் கோவில், மாரியம்மன் கோவில், மன்னீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள அருந்தவ செல்வி அம்மன் சன்னதி, பிள்ளையப்பன் பாளையம் செல்வநாயகி அம்மன் கோவில் ஆகியவற்றில் நேற்று அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !