பாதுகாத்தால் மட்டும் போதாது
ADDED :1205 days ago
இந்த அறையிலுள்ள தேவையற்ற பொருட்களை வெளியேற்று என மகனிடம் சொன்னார் தந்தை. சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது தேவையற்ற பொருட்களுடன் புத்தகங்கள் சில இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, ‘ஏன் இப்படி செய்தாய்’ எனக் கேட்டார். நீங்கள் சொல்வதைத் தான் நான் செய்தேன். ஒருமுறை கூட இந்த புத்தகங்களை நீங்கள் படித்ததை பார்க்கவில்லை. பயன்படுத்தாமல் வெறுமனே பாதுகாப்பதால் என்ன பயன் என்றான் மகன்.