காளஹஸ்தி சிவன் கோயில் அன்னதான திட்டத்திற்கு நன்கொடை
ADDED :877 days ago
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் நடக்கும் அன்னதான திட்டத்திற்காக ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த விஜயபாபு மற்றும் நாகசிரிஷா குடும்பத்தினர் ஒரு லட்சத்து 116 ரூபாய் நன்கொடையாக சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலுவிடம் வழங்கினர் .முன்னதாக இவர்களுக்கு சிறப்பு தரிசன ஏற்பாடுகளை செய்தனர்.கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசூனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும் கோயில் சார்பில் வழங்கப்பட்டது.