கடலூர் மாரியம்மன் கோவிலில் 60ம் ஆண்டு உற்சவ விழா
ADDED :979 days ago
கோவை : கோவை, காட்டூர் அருகில் இருக்கும் அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள கடலூர் மாரியம்மன் கோவில் அறுபதாவது ஆண்டு உற்சவ திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் நிறைவு நாளையொட்டி மூலவர் அன்னபூரணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.