சிம்ம வாகனத்தில் வரதராஜ பெருமாள்
ADDED :886 days ago
பரமக்குடி: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்ஸவ விழா நடக்கிறது. மே 24 காலை கொடி ஏற்றத்துடன் வைகாசி விழா துவங்கி, பெருமாள் அன்ன, சிம்ம வாகனங்களில் வலம் வந்தார். நேற்று மாலை சேஷ வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள், இன்று கருட வாகனத்தில் அருள் பாலிக்கிறார். மே 30 காலை திருக்கல்யாணம், ஜூன் 1 மாலை தேரோட்டம் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிர சபையினர் செய்துள்ளனர்.