உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அதிகமாக சாப்பிடாதீர்கள்

அதிகமாக சாப்பிடாதீர்கள்

* அதிகமாக சாப்பிட்டால் அறிவும், ஆரோக்கியமும் கெடும்.
* ஏழைகளின் கண்ணீர், கூரிய வாளுக்கு சமம்.  
* பொறுமையாளர்களையே இறைவன் நேசிக்கிறான்.
* நேர்வழியைப் பின்பற்றுபவர்கள் எதற்கும் பயப்படவோ, துயரப்படவோ மாட்டார்கள்.
* கெட்டதை சொல்வதை விட மவுனமாக இருங்கள்.  
* பெற்றோரை மதியுங்கள். அப்போதுதான் உங்கள் குழந்தைகள் உங்களை மதிக்கும்.    
* கல்வி கற்பது ஒவ்வொருவரின் கடமை.  
* போதும் என்ற மனமே உண்மையான செல்வம்.
* பிறர் மீது கருணை காட்டினால், இறைவனும் உங்கள் மீது கருணை காட்டுவான்.  
* எந்தவொரு சிறிய நன்மையையும் அலட்சியமாகக் கருதாதீர்கள்.
* கோபம், பசி, தாகம், இயற்கை உபாதை தொந்தரவுடன் இருக்கும்போது யாருக்கும் தீர்ப்பு வழங்க வேண்டாம்.
* மனிதர்களின் இயல்புகளை புரிந்து கொண்டால் துன்பம் இல்லை.
– பொன்மொழிகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !