வைகாசி செவ்வாய்; ஜெய மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :870 days ago
கோவை ; சுந்தராபுரம் காமராஜ் நகரில் உள்ள சக்தி விநாயகர், சித்தி விநாயகர், ஜெய மாரியம்மன் கோவிலில் வைகாசி மாதம் மூன்றாவது செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. மஞ்சள் நிற புடவையில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.