நங்கநல்லூர் திருமால் மருகன் கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்
ADDED :953 days ago
சென்னை ; நங்கநல்லூர் திருமால் மருகன் கோவிலில் புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
சென்னை நங்கநல்லூரில் உள்ளது அருள்மிகு திருமால் மருகன் கோவில். இங்கு கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்று வந்தது. விழாவில் இன்று காலை புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது. எராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.