ஒடிசா, புரி ஜகன்நாதர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
ADDED :914 days ago
ஒடிசா ; ஒடிசா மாநிலம் புரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஜகன்நாதர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாத பவுர்ணமி அன்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடப்பது வழக்கம். இதன்படி நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நடந்த அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.