காவடி வழிபாடு செய்வதால் உண்டாகும் நன்மை என்ன?
ADDED :975 days ago
முருகனுக்குரிய வழிபாட்டில் காவடி சிறப்பானது. மலைக்கடவுளான முருகனுக்கு அபிஷேக திரவியங்களை எடுத்துச் செல்லும் நோக்கில் ஏற்படுத்தப்பட்டநேர்ச்சையான இது, இடும்பனால்உருவாக்கப்பட்டது. பால், பன்னீர், இளநீர், சந்தனம் என காவடியில் சுமந்து சென்று முருகனை குளிர்விக்கும்போது, குழந்தைகடவுளான அவன் மனம் குளிர்ந்து, வேண்டும் வரங்களை வாரி
வழங்குகிறான்.