பல்லடம் சக்தி விநாயகர் கோவில் 9ம் ஆண்டு விழா
ADDED :874 days ago
பல்லடம்: பல்லடம் அருகே, சக்தி விநாயகர் கோவிலில், ஒன்பதாம் ஆண்டு விழா நடந்தது.
பல்லடம் அடுத்த, வடுகபாளையம், ஹாஸ்டல் ரோட்டில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் ஒன்பதாம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக, காலை, 5 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் ஆண்டு விழா துவங்கியது. பால், தயிர், இளநீர், பன்னீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் விநாயகருக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, காசி, பிள்ளையார்பட்டி, பவானி உள்ளிட்ட பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தங்கள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் சக்தி விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் கோவில் கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.