காளஹஸ்தி சிவன் கோயிலில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி தரிசனம்
ADDED :843 days ago
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு நீதிபதி அனிருதா போஸ் சுப்ரீம் கோர்ட் நீதிபதி குடும்பத்தாரோடு காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தவரை கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு மற்றும் அதிகாரிகள் பூர்ண கும்ப வரவேற்பு ஏற்பாடு செய்தனர். கோயிலுக்குள் சென்றவர்கள் முன்னதாக சிறப்பு ராகு கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜையில் ஈடுபட்டனர் .தொடர்ந்து ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் வளாகத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் கோயில் வேத பண்டிதர்கள் மற்றும் அர்ச்சகர்கள் சிறப்பு வேத ஆசீர்வாதம் செய்ததோடு பொன்னாடை போர்த்தி கௌரவித்து சாமி அம்மையார்களின் தீர்த்த பிரசாதங்களும் சாமி படத்தையும் வழங்கினர்.